சான் ஜோஸ் நகரில் குஜராத்தியர்கள், சீக்கியர்களை சந்தித்து பேசிய மோடி
சான் ஜோஸ்: பிரதமர் நரேந்திர மோடி சான் ஜோஸ் நகரில் குஜராத் மாநிலத்தவர்கள் மற்றும் சீக்கியர்களை சந்தித்து பேசினார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். 30 ஆண்டுகளில் சிலிக்கான் வேலி சென்றுள்ள முதல் இந்திய பிரதமர் மோடி தான்.
சனிக்கிழமை மாலை சிலிக்கான் வேலிக்கு வந்த மோடிக்கு 800 இந்திய அமெரிக்கர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். மோடி தங்கும் ஹோட்டலுக்கு வந்த அவர்கள் இந்திய தேசியக் கொடியை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
மோடி தன்னை வரவேற்க காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு தனது அறைக்கு சென்றார். அவர் குஜராத் சமூக உறுப்பினர்கள் மற்றும் சீக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் மோடி சிலிக்கான் வேலியில் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.