ஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'
Recommended Video
ஒசாகா: அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் மோடி 'JAI'என்கிற புதிய முழக்கத்தை முன்வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
ஜப்பானில் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் டிரம்ப், அபே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப், அபே மற்றும் மோடி ஆகியோரது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது அபே, மோடிக்கு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார் டிரம்ப்.
பின்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி உயர்வு குறித்து மோடியிடம் தமது கவலையை பகிர்ந்து கொண்டார் டிரம்ப். மேலும் இந்த வரி உயர்வை திரும்பப் பெறவும் டிரம்ப் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி
Committed to a better future.
— PMO India (@PMOIndia) June 28, 2019
Meeting of JAI (Japan-America-India)Trilateral takes place in Osaka.
PM @AbeShinzo welcomes the leaders. @POTUS congratulates Prime Ministers Modi and Abe for their electoral victories.
PM Modi highlights the importance India attaches to JAI. pic.twitter.com/IBjkzFuTKY
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஜெய் என்றாலே வெற்றி என அர்த்தம் என்றார். அதாவது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா (JAI) என்பதையே மோடி அவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே இந்தியாவில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிடாத தலித்துகள், சிறுபான்மையினர் கொல்லப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர். இதை வலதுசாரிகள் ஒரு ஆயுதமாகவே கையில் எடுத்துள்ளனர்.
இப்போது சர்வதேச மாநாட்டிலும் ஜெய் என்கிற புதிய முழக்கத்தை மோடி முன்வைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.