பொறுமையை இழந்துவிட்டேன்.. மன்னிப்பு கேட்கிறேன்.. போப் பிரான்சிஸ் அறிக்கை
Recommended Video
வாடிகன்: பெண்ணின் கைகளை தட்டி விட்டதற்காக, போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி வாடிகன் நகரின், புனித பீட்டர் சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் தலைமையில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, போப், பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார்.
அப்போது கூட்டத்தில், நின்ற, ஒரு பெண், அவர் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் சற்று நிலைகுலைந்து போனார், போப் பிரான்சிஸ். அந்த பெண்ணின் கையை இரு தடவை தட்டிவிட்டார்.
இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில்தான், தனது செயலுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
This evening after visiting the Nativity scene in St. Peter's Square, Pope Francis loses his cool after being grabbed by a pilgrim who wouldn't let go of his hand. The Pope repeated slapped her hand and told her to let go of him. pic.twitter.com/6Qrgh8aZKz
— Catholic Sat (@CatholicSat) December 31, 2019
நாம் பல முறை பொறுமையை இழந்துவிடுகிறோம். எனக்கும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு மோசமான, உதாரணத்தை நான் காண்பித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு போப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.