புனிதர்கள்...
இன்று புனிதர் பட்டம் பெற்ற இந்த இருவரையும் சேர்த்து நூற்றாண்டு பெருமை மற்றும் பழமை வாய்ந்த சைரோ மலபார் சர்ச், 3 புனிதர்களைப் பெற்ற பெருமையை அடைகிறது. கடந்த 2008ம் ஆண்டு கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு வாடிகன், புனிதர் பட்டம் வழங்கியது என்பது நினைவிருக்கலாம்.
1829ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் பாதிரியாராக செயல்படத் தொடங்கினார். இவர் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் ஆவார். பல்வேறு புரட்சிகரமான நடவடிக்கைகளையும் எடுத்தவர். இவரும், கன்னியாஸ்திரி அல்போன்சாவும் கடந்த 1986ம் ஆண்டு புனிதர் பட்டத்துக்குத் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
சைரோ மலபார் கத்தோலிக் சர்ச்சின் சார்பாக பல பள்ளிகளையும், சர்ச்சுகளையும் நிறுவியவர் பாதிரியார் குரியகோஸ். மேலும் கோட்டயத்தில் முதலாவது சைரோ மலபார் சர்ச்சுகளுக்கான அச்சகத்தையும் தோற்றுவித்தவர். இந்த அச்சகம்தான்,முதல் மலையாள நாளிதழை அச்சிட்டு வெளியிட்டது.
1871ம் ஆண்டு பாதிரியார் குரியகோஸ் மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம் கூனம்மாவு என்ற இடத்தில் உள்ள புனித பிலோமினாள் சர்ச்சில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.