தீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு
மெக்சிகோவில் உள்ள போபோகெட்டபேட்டில் எரிமலை வெடித்து தீயை கக்கி இருக்கிறது.
மெக்சிஸ்க்கோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள ''போபோகெட்டபேட்டில் எரிமலை'' வெடித்து தீயை கக்கி இருக்கிறது.
மெக்சிகோவில் உள்ள போபோகெட்டபேட்டில் எரிமலை மிகவும் மோசமான எரிமலைகளில் ஒன்றாகும். இந்த எரிமலை தற்போது லாவா குழம்புகளை வெளியே விட ஆரம்பித்து இருக்கிறது.
இந்த எரிமலை லாவா குழம்புகளை வெளியே விடும் வீடியோ வெளியாகி உள்ளது. வானம் முழுக்க தீ துகள்கள் நிரம்பி இருப்பது பார்க்கவே பீதியாக உள்ளது. இதில் லாவா குழம்புகள் அழுத்தம் காரணமாக அப்படியே மேலே பறப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
|
போபோகெட்டபேட்டில் எரிமலை
இந்த போபோகெட்டபேட்டில் எரிமலை மெக்சிகோவில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகும். இதன் உயரம் 5426 மீட்டர் ஆகும். இதன் காரணமாகவே இது வெடித்தால் அதிக சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
|
கடைசியாக எப்போது
கடைசியாக இந்த எரிமலை 2004ல்வெடித்தது. ஆனால் அப்போது முழுக்க முழுக்க வெடித்து சிதறாமல் லாவாவை மட்டும் வெளியே விட்டுவிட்டு சென்றது. அப்போதில் இருந்தே இந்த எரிமலை வெடித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது தீவிரமடைந்துள்ளது.
|
வானம் முழுக்க தூவியது
இந்த நிலையில் நேற்று இந்த எரிமலை தீவிரமாக லாவாக்களை கக்கி இருக்கிறது. இதனால் பெரிய புகை எழுந்துள்ளது. வானம் முழுக்க சிறிய சிறிய தீ துகள், நெருப்பு போலவே பரவி இருக்கிறது. ஆகாயமே தீ பிடித்தது போல இந்த காட்சி அமைந்து இருக்கிறது.
|
அச்சம் தெரிவித்தனர்
இதனால் தற்போது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த எரிமலை இன்னும் தீவிரமாக வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. எரிமலையை சுற்றி 100 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள எல்லோரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
{document1}