மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும் முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலையில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
தலைநகரம் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவை நிலைகுலைய வைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- படங்கள்
இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
Earthquake in Mexico City... pic.twitter.com/jBCF99TwxA
— ZORKİ (@gulumsedusun) June 24, 2020