For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும் முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலையில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

Powerful 7.4 magnitude earthquake strikes Mexico

தலைநகரம் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவை நிலைகுலைய வைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- படங்கள்

Powerful 7.4 magnitude earthquake strikes Mexico

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

Recommended Video

    அடுத்தடுத்து ஏற்படும் புயல், நிலநடுக்கம்.. என்ன காரணம்?

    English summary
    Powerful 7.4 magnitude earthquake strikes Mexico on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X