பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம்
லாகூர்: பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மாடல் அழகி குவான்டீல் பலூச்சைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அவரது அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் வாசிம் அஸீம். இவரை போலீஸார் கைது செய்து தற்போது விசாரித்து வருகின்றனர். அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்.
அது மட்டுமல்ல, வேறு பல பிரச்சினைகளும் அவரால் வந்தன. முப்தி குவாவி என்ற மத குருவுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்பியும், கொண்டிருந்த உறவும் கூட என்னை கோப்படுத்தி விட்டது.
கொல்வதற்கு முன்பு நான் தூக்க மாத்திரை கொடுத்து விட்டேன். இதனால் யார் கொலை செய்தது என்பது அவருக்கு தெரியாது என்று கூறியுள்ளார் வாசிம்.