For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு
ஜகர்தா: இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் சுலாவெசியின் வடக்கு பகுதியில் உள்ள மனாடோ நகரின் தெற்கில் 220 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எற்பட்டதாக உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Quake measuring 6.5 in the Richter scale hit Sulawesi island in Indonesia.
Story first published: Wednesday, September 10, 2014, 11:32 [IST]