தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்
ஹுவாலியன்: தைவானில் செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
தைவானில் உள்ள கடற்கரை நகரமான ஹுவாலியன் அருகே நேற்று இரவு 11.50 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியன் நகரில் உள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர், 214 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஹுவாலியன் நகரில் உள்ள மார்ஷல் ஹோட்டலின் தரை தளம் இடிந்தது. ஹோட்டலில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மருத்துவமனை உள்பட 5 கட்டிடங்களும் மோசமாக சேதமடைந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் இது என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
#TaiwanEarthquake: 173 people still unaccounted for as of 8:00 am local time; fire reported in one of the severely damaged buildings as rescuers continue their operations pic.twitter.com/GuHDDXnSAn
— People's Daily,China (@PDChina) February 7, 2018