எவரெஸ்ட்டுக்கு மிக அருகே உலுக்கிய நிலநடுக்கம்.. !
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்திற்கு மிக அருகே உள்ள கிராமத்திற்கு அருகேதான் நிலநடுக்கத்தின் மையம் இருப்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.,
இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க மையத் தகவல் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் எவரெஸ்ட் சிகரத்திற்கு வெகு அருகாமையில் உள்ள நம்சே பஜார் என்ற நகரை இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த நகரமானது எவரெஸ்ட்டிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் 12.50 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையமானது சீனாவின் ஷாம் நகருக்கு தென் கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவிலும், நேபாளத்தின் பனீப்பாவிலிருந்து கிழக்கு வட கிழக்கே 66 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது.
இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அதிர்வுகள் பலமாக உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இல்லை.