சுதந்திர தின விழாவின்போது அசிங்கமாகப் பேசிய நபர்... ரவீனா டான்டன் புகார்
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவின்போது தன்னிடம் போட்டி அமைப்பாளர்களில் ஒருவர் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக இந்தி நடிகை ரவீனா டான்டன் கூறியுள்ளார்.
மேடையில் தான் ஏறியதும் அவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் ரவீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் குமுறல் வெளியிட்டுள்ளார்.
எல்லாமே நல்லாப் போச்சு
இதுகுறித்து அவர் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸில் 2 நாட்கள் சுதந்திர தின விழாவை சந்தோஷமாக கொண்டாடினேன். ஆனால் முடிவுதான் சோகமாக அமைந்து விட்டது. எல்லாமே நன்றாகத்தான் போனது, அந்த குடிகார நபர் மேடைக்கு வரும் வரை.
அசிங்கமான கமெண்ட்
என்னிடம் அசிங்கமான கமெண்ட் அடித்தார் அந்த நபர். தவறாக நடந்து கொண்டார். அவரைத் தட்டிக் கேட்க அங்கு யாருமே இல்லை.
காரில் ஏற்றாததால்
தனது குழந்தைகளை எனது காரில் என்னுடன் பயணிக்க கோரிக்கை வைத்திருந்தார் அவர். ஆனால் அதை நான் ஏற்காததால் கோபத்தில் என்னிடம் இப்படி தாறுமாறாக நடந்து கொண்டார் அந்த நபர்.
நானா மாட்டேன் என்றேன்
நிகழ்ச்சி அமைப்பாளர்களில் அவரும் ஒருவர். பாதுகாப்பு விதிமுறைகள் இடம் கொடுக்காததால்தான் அவரது குழந்தைகளை எனது காரில் ஏற்ற முடியாமல் போனது. இது அவருக்குப் புரியவில்லை.
பொறுக்க முடியவில்லை
அவரது அசிங்கமான பேச்சைப் பொறுக்க முடியாமல் மற்ற சிலரை நான் அழைத்து முறையிட நேரிட்டது. அதன் பிறகுதான் அவரது வாய் மோசமான வார்த்தைகளை நிறுத்தியது. பின்னர் அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார் என்று புலம்பியுள்ளார் ரவீனா.