இந்த வீடியோவை பார்த்து இந்த நபர் பேயா, பிசாசான்னு சொல்லுங்க பாஸ்!
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள கடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி கேமராவில் வாலிபர் ஒருவர் கண்ணாடியை தாண்டிச் செல்கையில் அவரது உருவம் அதில் பிரதிபலிக்காதது பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சவான்னா நகரில் உள்ள செருப்பு கடையில் இருப்பவர்களால் அவர்கள் கண்ணையே அவர்களால் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான விஷயம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால் அது இது தான்,
செருப்பு கடையில் சிலர் செருப்பு வாங்கிக் கொண்டிருந்தனர். கடையில் இருந்த பெரிய கண்ணாடியில் பிற வாடிக்கையாளர்களின் உருவம் பிரதிபலிக்கிறது. ஆனால் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் அதில் பிரதிபலிக்கவே இல்லை.
அப்படி என்றால் அவர் பேயா, இல்லை ரத்தக் காட்டேறியா என்று மக்கள் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.