ரோமிலும் ஒரு “சுமைதாங்கி” கல்.. 10,000 வருடப் பழமையாம்!
ரோம்: உலகின் மிகப்பழமையான சுமைதாங்கி கல் அகழ்வாராய்ச்சியாளர்களால் மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில்தான் சுமை தாங்கிக் கல் உள்ளது என்றால் ரோமிலும் அது கிடைத்துள்ளது ஆச்சரியமூட்டுவதாக உள்ளது.
12 மீட்டர் உயரமாம்:
இத்தாலியின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மற்றும் இத்தாலி கடலாராய்ச்சி மையத்தின் ஆய்வாளரும் இணைந்து நிகழ்த்திய இந்த அகழ்வாராய்ச்சியில் 12 மீட்டர் உயரம் கொண்ட சுமைதாங்கி கல்லின் பாகங்கள் சிசிலி கடலுக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரையில் ஒட்டிய அமைப்பு:
இது தரையில் அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் எனவும், மனிதன் வாழ்ந்து வந்த இப்பகுதி தண்ணீரால் பின்னர் சூழப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கடவுள் நம்பிக்கை கற்கள்:
வேட்டையாடி வாழ்ந்து வந்த கற்கால மனிதனின் கடவுள் நம்பிக்கைகளை உணர்த்துவதாக சுமைக்கற்கள் அடையாளம் காணப்படுகின்றன.
பழமையானது இதுதான்:
இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான இந்த சுமைதாங்கி மனிதனின் அறிவாற்றலையும், சமூகமாக அவன் வாழ்ந்து வந்ததையும் உணர்த்துகிறது.
தரைக்கடலில் மனிதர்கள் வாழ்க்கை:
இந்த கண்டுபிடிப்பு மனிதன் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழத் தொடங்கிய காலகட்டத்தை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.