ச்சே.. கொள்ளையர்களுக்கே உரிய கெத்தை கெடுத்திட்டீங்களேய்யா.. அப்பிரண்டீஸ்களா!
கடைக்குள் கொள்ளையடிக்க வந்த திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
பிரஸ்ஸல்ஸ்: கொள்ளைக்காரங்கன்னா ஒரு கெத்து வேணாமா?.. இப்படியா அப்பிராணியா இருக்கிறது?
பெல்ஜியத்தின் இ-சிகரெட் ஷாப் ஒன்று இருக்கிறது. இந்த கடைக்குள் 6 கொள்ளைக்காரர்கள் திடீரென புகுந்து எல்லா பணத்தையும் எடு என்றார்கள். இதனால் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார். 6 பேராக வந்துவிட்டதால் அவரால் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால் கடையிலுள்ள பணத்தை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும் என்று நினைத்தார்.
நாளைக்கு வர்றீங்களா?
அதனால் கொள்ளைக்காரர்களிடம், "இப்போ கடையிலே ஒன்னுமே இல்லையே.. இப்போ போய் வந்திருக்கீங்க. பணம் நிறைய இருக்கும்போது கொள்ளை அடிச்சாதானே உங்களுக்கும் சவுகரியமா இருக்கும். அதனால நாளைக்கு சாயங்காலம் வந்தீங்கன்னா, பணமும் நிறைய இருக்கும். உங்களுக்கும் ஈசியா இருக்கும்" என்றார். இதை கேட்டதும் கொள்ளைக்காரர்களும் கடையும், கடைக்காரரையும் எதுவுமே செய்யாமல் அமைதியாக கிளம்பி வந்துவிட்டனர்.
[செவ்வாய்க்கிழமை ராத்திரி கெஸ்ட் ஹவுஸில் மீட் பண்ணலாம்.. ஆசை ஆசையாய் போய் பார்த்தால்! ]
கடைக்காரருக்கு ஷாக்
மறுநாள் சாயங்காலம், இந்த நேரத்தில் போனால்தான் பணம் இருக்கும் என்று கடைக்காரர் சொன்னாரே என்று நினைத்து 6 கொள்ளையர்களும் மீண்டும் அதே கடைக்கு போனார்கள். நம் பேச்சை நம்பி இப்படி 6 பேரும் திரும்பி வந்து நிற்பதை பார்த்ததும் கடைக்காரருக்கு ஷாக் ஆகி விட்டது. ஆனால் அடுத்த வினாடியே தங்களை போலீசார் ரவுண்ட் அப் பண்ணியதும், கொள்ளையர்களுக்கு அதற்கு மேல் ஷாக் ஆகிவிட்டது.
சுற்றி வளைத்தனர்
இவர்கள் இப்படி திரும்பவும் வருவார்கள் என்று ஏற்கனவே கடைகாரர் போலீசுக்கு தகவல் தந்திருந்தார். ஆனால் அதை போலீஸ்தான் நம்பவே இல்லை. எந்த கொள்ளையர்களாவது கடைக்காரர் பேச்சை நம்பி வருவார்களா? என்று போலீசார் நினைத்தனர். ஆனாலும் தெரிந்தும் எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்று கடைக்கு பின்னாடியே ஒளிந்திருந்து, 6 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
ஷார்ப் டைம்
கடைக்காரர் சொன்ன டைமுக்கு ஷார்ப்பாக கொள்ளையர்கள் கடைக்குள் வந்து நின்றதும், அவர்களை போலீசார் கைது செய்ததும் வீடியோவாக வைரலாகி வருகிறது. கொள்ளையர்கள் லேசா இருக்கலாம்.. ஆனால் இப்படியாப்பா லூசா இருப்பது.. போய் நல்லா டிரெய்னிங் எடுத்து வாங்க போங்க.. போங்க!