உலக அழகன் பட்டம் வென்றார் நடிகர் ரோஹித்.. இப்பட்டம் வென்ற முதல் இந்தியர் இவர்தான்!
லண்டன்: உலக அழகன் போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த டிவி நடிகரும், மாடலுமான ரோஹித் கந்தல்வால் என்பவர் உலக அழகன் பட்டத்தை வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் இருக்கும் சவுத்போர்த் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை 2016ம் ஆண்டுக்கான உலக அழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் கலந்து கொண்டனர்.
Introducing... Mr World 2016, Rohit Khandelwal of INDIA! #MrWorld2016 pic.twitter.com/32m8QVAdvd
— Mr World Official (@MrWorldOfficial) July 19, 2016
கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட அந்த 47 பேரில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த டிவி நடிகரும், மாடலுமான ரோஹித் கந்தல்வாலும் ஒருவர். இந்த போட்டியில் ரோஹித் உலக அழகன் பட்டத்தை வென்றார்.
உலக அழகன் பட்டத்தை முதல் முறையாக வென்ற இந்தியர் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Happy 😊
— Rohit Khandelwal (@irohit67) July 20, 2016
Yes
Thanks to all who have been supporting
Thank you so much
❤❤❤❤ pic.twitter.com/TAeTCck7gP
உலக அழகன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டி குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். ரோஹித்தும் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவை பெருமையடையச் செய்த ரோஹித்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.