ஓ மை காட்.. போக்கிமான் கேரக்டர் இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டதாம்!
மாஸ்கோ: போக்கிமான் பைத்தியம் மக்களுக்கு முற்றிப் போய் விட்டதாக தெரிகிறது. மாஸ்கோவில் ஒரு பெண், போக்கிமானில வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய கம்ப்யூட்டர் கேம்ஸ்தான் போக்கிமான். உலகம் பூராவும் இதற்கு தற்போது மக்கள் வயது வித்தியாசமின்றி அடிமையாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்கோ காவல் நிலையம் ஒன்றில் போக்கிமான் கேரக்டர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் போக்கிமானில் வரும் ஒரு கேர்க்டர், தான் தூங்கிக் கொண்டிருக்கும்போது தன்னை பலாத்காரம் செய்து விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், "நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் விளையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் தூங்கப் போய் விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது, போக்கிமான் கேரக்டர் என் மீது படுத்திருந்தது. அது செக்ஸ் தாக்குதல்தான். நான் பலாத்காரம் செய்யப்பட்டு விட்டேன்" என்று கூறியுள்ளார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த கேரக்டரிடமிருந்து தப்பிக்க நான் படுக்கையிலிருந்து கீழே குதித்தேன். பிறகு அது ஓடி விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை அப்பெண்ணின் கணவர் நம்பவில்லை. தனது மனைவியை நல்ல மன நல ஆலோசகரிடம் காண்பிக்கவுள்ளதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விளையாட்டானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா , ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளது. இந்தியா, சீனா தவிர்த்து மேலும் சில ஆசிய நாடுகளுக்கும் இது பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.