சாதனை மேல் சாதனை...பிரிஸ்பேன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை ருசித்தது சானியா - ஹிங்கிஸ் ஜோடி...
பிரிஸ்பேன்: பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
ஆஸ்திரேயாவின் பிரிஸ்பேன் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சானியா (இந்தியா) - மார்ட்டினா ஹிங்கிஸ் (ஸ்விட்சர்லாந்து) ஜோடி, ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்ஜலிக்யூ கெர்பர் - அன்ட்ரியா பெட்கோவிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
முதல் செட்டில் அனுபவம் வாய்ந்த சானியா ஜோடிக்கு, ஜெர்மனி ஜோடி கடும் சவால் விடுத்தது. இரு ஜோடியும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றியது. கடும் முயற்சிக்குப்பின் முதல் செட்டை சானியா ஜோடி 7-5 என கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டில் சானியா ஜோடி நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த செட்டை அதிரடியாக 6-1 என எளிதில் வென்று 2-0 என நேட்செட்டில் சானிய ஜோடி, வெற்றி பெற்று சாம்பியன் படத்த்தை தட்டிச்சென்றது.
இந்த ஆண்டு தனது முதல் சாம்பியன் பட்டத்தை சானியா ஜோடி பதிவு செய்துள்ளது. இதுவரை தொடர்ச்சியாக 25 இறுதிப்போட்டிக்கு இந்த ஜோடி முன்னேறியுள்ளது.
2012ல் இத்தாலியின் ஷரா எரானி-ரோபர்ட்டா வின்ஸி ஜோடி இதேபோன்று தொடர்ச்சியாக 25 வெற்றிகளை பெற்றிருந்தது. இந்த ஜோடியின் வெற்றி விம்பிள்டனில் தடுத்து நிறுத்தப்பட்டது. 1994ம் ஆண்டு ஜிஜி பெர்ணான்டஸ்-நடாஷா ஜிவரெவொ ஜோடி தொடர்ச்சியாக 28 பெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இதை எட்டிப் பிடிக்க சானியா ஜோடிக்கு இன்னும் 2 வெற்றிகளை பெற வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு சானியா-ஹிங்கிஸ் ஜோடி 9 பட்டங்கள் வென்று அசத்தியது. மேலும் கடைசியாக பங்கேற்ற 5 தொடர்களிலும் கோப்பை வென்றுள்ள இந்த ஜோடி தொடர்ச்சியாக பெறும் 26வது வெற்றி இதுவாகும்.