ரியாத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை.. இடைமறித்து அழித்த சவுதி!
தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது.
Recommended Video
ரியாத்: தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. இதை ஏமனில் உள்ள ஹவுதி போராளி குழு ஏவியதாக கூறப்படுகிறது.
ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய எதிரி சவுதிதான். ஏமனின் பெரும்பான்மையான பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததில் இருந்தே சவுதிக்கும், ஹவுதி போராளி குழுவிற்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சவுதியில் அந்த குழு ஏவுகணைகளை ஏவி இருக்கிறது. அதிகமாக எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை ஏவி உள்ளது.
இந்த போராளி குழு கடந்த சில வருடங்களாக ஏமனில் பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது சவுதியுடன் போரிட்டு வருகிறது. இந்த குழுவிற்கு ஈரான் உதவி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. சவுதி நேரடியாகவே இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கிங் காலித் விமான நிலையத்தை தாக்க முயன்று இருக்கிறது. அதேபோல் அங்கு இருக்கும் பெரும்பாலான, வணிக பகுதிகளை தாக்கி அழிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் ஹவுதி குழு அனுப்பிய ஏவுகணையை பாதி வழியிலேயே மறித்து சவுதி செயலிழக்க வைத்து இருக்கிறது.
இதனால் பெரிய பாதிப்பில் இருந்து சவுதி தப்பியுள்ளது. இதனால் எந்த கட்டிடமும் இடிபாடுகளுக்கு உள்ளாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் காயம், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்த குழு சவுதியை தாக்க இரண்டு மாதம் முன்பு முயற்சி எடுத்து இருந்தது. அப்போதும் சவுதி தலைநகர் ரியாத்தை நோக்கி ஏவுகணைவிட்டது. அப்போதும் சவூதி ராணுவம் வழிமறித்து தாக்கியது.