பஸ் நிறுத்தத்தில் பலானது செய்த பலே ஜோடி- பயணிகள் அதிர்ச்சி
மர்ஸ்கோ ஸ்ரிடிஸ்க்: பஸ் நிறுத்தத்தில் தனது காதலியுடன் திடீரென வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஐரோப்பிய நாடான கங்கேரியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது மர்ஸ்கோ ஸ்ரிடிஸ்க் என்ற சிறுநகரம். இங்குள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் சில பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஜோடி யாரைப்பற்றியும் சிறிதும் சட்டை செய்யாமல், பஸ் நிறுத்தத்தின்பின்புறமுள்ள பிளாட்பாரத்தில் படுத்து உல்லாசமாக இருக்க தொடங்கினர்.
பஸ் நிறுத்தத்தில் நின்ற பயணிகள் இதைப்பார்த்து அருவருப்படைந்தனர். சிலர் ஆச்சரியப்பட்டு தங்களது செல்போன்களில் படம் எடுக்க ஆரம்பித்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் முதியோருக்காக செயல்படும் ஒரு கிளப்பும் உள்ளது. அதில் இருந்த முதியவர் ஒருவர் இந்த கொடுமையை பார்த்து போலீசாருக்கு போன் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குள் போலீசார் அங்கு வந்துள்ளனர்.
ஆனால் அதற்குள் மேற்படி ஜோடி தங்களது 'வேலையை' முடித்துவிட்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு ஹாயாக வெட்கமே இல்லாமல் அதே பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தனர். போலீசார் வந்ததும், ஜோடிகளின் கூத்தை செல்போனில் படம் எடுத்த சிலர் அதை காண்பித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து ஜோடிகள் இருவரின் அடையாள அட்டைகளை பரிசோதி்த்து முகவரியை எழுதிக்கொண்ட போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
ஐரோப்பிய சட்டப்படி பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த ஜோடிக்கும் அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அடக் கருமமே!