அமெரிக்காவில் பாலியல் தொழில்.. தெலுங்கு நடிகைகளுக்கு வலைவிரித்த ஆந்திர தம்பதி
அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
சிகாகோ: அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தெலுங்கு சினிமா உலகிற்கு இது போதாத காலம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஸ்ரீரெட்டி அந்த சினிமா உலகில் பெரிய புயலை கிளப்பினார். இதனால் பலரின் பெயரும், புகழும் பெரிய அளவில் அடிபட்டது.
இந்த நிலையில் அவர்களின் பிரச்சனை தற்போது அமெரிக்கா வரை சென்றுள்ளது. அமெரிக்காவில், பாலியல்தொழில் செய்து வந்த ஒரு குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது.
யார் இவர்கள்
ஆந்திராவை சேர்ந்த கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகிய இருவரும்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கிஷான் பாரம்பரியமாக வியாபாரம் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை சினிமாவில் போட்டு லாபம் பார்க்கும் வேலையை சந்திரா செய்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் இவர்கள் பல வருடமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
கொடுமை
இவர் அமெரிக்காவிற்கு சில தெலுங்கு நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் படங்கள் எடுக்கவும் அந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். 10க்கும் அதிகமான சிறிய நடிகைகளை இப்படி இவர்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். நடிகை ஒருவர் புகாரின் அடிப்படையில் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
மிகவும் மோசம்
அதேபோல் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகைகளை இவர்கள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்துவிட்டு, மிகவும் மோசமான அறையில் தங்க வைத்து உணவு, சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்பட வைத்து பின் பாலியல் தொழிலுக்கு உடன்படுத்தி இருக்கிறார்கள். 6 பேரை மோசமாக தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
போலீஸ் கைது
இவர்கள் இருவரும் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.அமெரிக்க போலீஸ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இன்னும் முக்கியமான விஷயங்கள் வெளியே வர வாய்ப்புள்ளது.