100 பெண் பிணங்களுடன் உறவு.. அமெரிக்காவை அதிர வைத்த நபர்!
ஓஹையோ, அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் பிணங்களுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார். இவர் இதுவரை 100 பெண் பிணங்களுடன் உறவு கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்து போலீஸார் அதிர்ந்துள்ளனர்.
இவர் ஓஹையோவில் உள்ள ஒரு மருத்துவமனை பிணவறையில் காப்பாளராகப் பணியாற்றுகிறார். அங்கு வைத்துத்தான் தனது அறுவெறுப்பான வேலையைச் செய்து வந்துள்ளார்.
இந்த நபரின் செயல் அந்த பிணவறை நிர்வாகத்திற்கும் தெரிந்துள்ளது. ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது நிர்வாகம். இதனால் அவர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.
கென்னத் டக்ளஸ்
அந்த நபரின் பெயர் கென்னத் டக்ளஸ். இவர் குடி போதையிலும், போதை மருந்து உட்கொண்ட நிலையிலும் இந்த செயலைச் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
பிணமாக இருந்தால் என்ன...
கடந்த 1976ம் ஆண்டு முதல் 1992 வரை இங்கு வேலை பார்த்துள்ளேன். அங்கு வரும் பெண் பிணங்களை, குறிப்பாக இளம் பெண் பிணங்களைத்தான் நான் எனது இச்சைக்குப் பயன்படுத்துவேன். பிணமாக இருந்தாலும் அதுவும் பெண்தானே. வேலையும் சுலபமாக இருக்கும்.
இரவுப் பணிதான்
கென்னத் பெரும்பாலும் இரவு நேரப் பணியில்தான் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு மிகவும் வசதியாகி விட்டது. நினைத்த நேரத்தில் பிணங்களுடன் உறவு வைத்துள்ளார்.
கொலையான பெண்ணுடன் உறவு வைத்து
இவர் இப்படி அட்டகாசம் செய்து வந்த போதிலும் அவர் சிக்காமல் தப்பி வந்தார். ஆனால் 19 வயதான கேரன் ரேஞ்ச் என்ற பெண்ணின் உடலுடன் உறவு கொண்டபோதுதான் சிக்கி விட்டார். காரணம், அப்பெண்ணின் உடலில் கென்னத்தின் விந்தனு போய் தேங்கி விட்டது. கேரன், கொலை செய்யப்பட்ட பெண் ஆவார். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது விந்தனு கண்டுபிடிக்கப்பட்டு விசாரித்தபோதுதான் கென்னத் சிக்கிக் கொண்டார்.
வந்து சேர்ந்ததும்
பிணவறைக்கு வந்து சேர்ந்ததுமே பெண்களின் பிணங்களுடன் உறவு கொண்டு விடுவாராம் கென்னத். இல்லாவிட்டால் உடல் விறைத்துப் போய் விடும் என்பதால் உடனடியாக அக்கிரமத்தில் ஈடுபடுவாராம்.
மாட்டி விட்ட மனைவி
கென்னத்தின் செயல் குறித்து அவரது மனைவிக்குத் தெரிய வந்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். இவரும் அதே மருத்துவமனையில்தான் வேலை பார்த்து வந்தார். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது அவர்கள் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டனராம். இதனால் போலீஸாருக்கு தகவல் கொடுத்து கணவரை மாட்டி விட்டு விட்டார்.