அதிசயம் ஆனால் உண்மை: குழந்தை பெற்ற மூன்றாம் பாலினத்தவர்
பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் குழந்தை பெற்ற அதிசயம் நடந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள நியூகோயலின் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆணாக மாற விரும்பினார். இதையடுத்து அவர் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டார். ஆனால் தனது கர்ப்பப்பையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் அவர் விந்து தானம் பெற்று கர்ப்பமானார். கடந்த 2013ம் ஆண்டு அவர் தனது வீட்டில் மருத்துவச்சியின் உதவியுடன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தன்னை அதன் தந்தையாக குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
ஐரோப்பாவில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்டது இதுவே முதல் முறை ஆகும். தற்போது ஆணாக உள்ள அவர் தனது குழந்தைக்கு தாயும், தந்தையுமாக இருக்கிறார்.
பழைய செய்தி தான் ஆனால் தற்போது இணையதளங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் ஒரு முறை படித்துவிடுவதில் தவறு ஏதும் இல்லை.