ஜோர்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு... இருவர் பலியானதால் பதற்றம்
ஜோர்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.
அமான்: ஜோர்டன் தலைநகர் அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.
மரச்சாமான்கள் விற்பனை செய்யும் ஜோர்டானைச் சேர்ந்த இருவர் அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் நுழைந்தனர். அப்போது தங்களிடம் இருந்த துப்பாக்கி மூலம் அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டனர். இதில் இருவர் உயிரிழந்துவிட்டனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.பின்னர் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். அந்த இருவரும் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் எந்த காரணம் தெரியவில்லை என்று போலீஸார் கூறினர்.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியரின் புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர் பொருத்திய இஸ்ரேலை கண்டித்து அமானில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான ஜோர்டான் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.