For Daily Alerts
Just In
கொலராடோ.. வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி, பலர் காயம்
அமெரிக்காவின் கொலராடோவின் தோர்ண்டன் நகரில் தூப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொலராடோ மாகாணத்தின் தோர்ண்டன் நகரில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலர் காயமடைந்து விட்டதாக அமெரிக்கக் காவல்துறையினர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 2 பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தீவிரவாத சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நேற்றைய தினம் நியூயார்க் நகரில் நடந்து சென்றவர்கள் மீது தீவிரவாதி ஒருவன் டிரக்கை மோதிய சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Two men are dead and a woman was rushed to the hospital after reports of a shooting in a Walmart roughly ten miles north of downtown Denver.