10 பேரை உடல் சிதற வைத்து கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்: பதற வைக்கும் வீடியோ
காபூல்: ஆப்கானிஸ்தானில் தரையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து அதன் மீது 10 பேரை முழங்காலிட வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்து அவர்களை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த 10 பேரும் நாங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த மாகாணத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த 10 பேரின் கண்களை கட்டி ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 10 குழிகளைத் தோண்டி அதில் பத்து வெடிகுண்டுகளை புதைத்தனர். பின்னர் அந்த 10 பேரை குண்டுகள் புதைக்கப்பட்ட இடங்களில் முழங்காலிடச் செய்தனர்.
அவர் முழங்காலிட்டதும் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் அந்த 10 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூரச் சம்பவத்தை தீவிரவாதிகள் வீடியோ எடுத்து ஜிஹாதி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக தீவிரவாதிகள் பிணையக்கைதிகளை கூண்டில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற கொடூரமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.