For Daily Alerts
Just In
லண்டனில் அமிலம் வீசி தாக்குதல்- 6 பேர் படுகாயம்; சிறுவன் கைது
லண்டனில் பொதுமக்கள் மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்தியதாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன்: லண்டனில் நச்சு அமிலத்தை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கு லண்டனில் பொதுமக்கள் மீது நச்சு அமிலம் வீசப்பட்டது.
இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
English summary
A UK teen has been arrested after six people were injured when a noxious substance was thrown during an incident at an east London shopping mall.
Story first published: Sunday, September 24, 2017, 17:18 [IST]