For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்.. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை தொடர்ந்து.. ஸ்லோவேக்கியா பிரதமருக்கும் கொரோனா..!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பிராத்திஸ்லாவா: பிரான்ஸ் அதிபர் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற, ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்... இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காதான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.. அடுத்ததாக இந்தியா இருக்கிறது.

3வது இடத்தில் பிரேசிலும், ரஷ்யா நான்காவது இடத்திலும், பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளன.. உலக அளவில் இப்படி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்... அந்த வகையில் அதிபர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர்

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது... இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஸ்லோவேக்கியா பிரதமர் ஐஹோர் மடோவிக் உள்ளிப்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்... இத்தனைக்கும் இந்த கூட்டத்தில் சமூக இடைவெளியை உட்பட அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைவருமே பின்பற்றினர்.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த சமயத்தில்தான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் மேக்ரானுக்கு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது.. அதனால் அதிபரே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால், மேக்ரானின் மனைவியும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

 கொரோனா

கொரோனா

இதனிடையே, ஒருவேளை, ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களும் கொரோனா பரவியிருக்கலாமோ என்ற கலக்கம் எழுந்தது.. அதனால், அந்த ஐரோப்பிய கூட்டத்தில் பங்கேற்ற எல்லாருக்குமே கொரோனா டெஸ்ட் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன... அந்த வகையில் ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமர் ஐஹோர் மடோவிக்-கும் டெஸ்ட் செய்து கொண்டார்..

 அலுவல் பணி

அலுவல் பணி

அப்போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.. ஐஹோருக்கு 47 வயதாகிறது.. இதையடுத்து ஐஹேர் மடோவிக் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்... "பிரதமர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார், இருந்தாலும் அவர் தனது அலுவல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார்" என்று ஸ்லோவேக்கியா அரசு தெரிவித்துள்ளது.

English summary
Slovakia's PM Matovic Tests Positive For Virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X