For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோமாலிய துறைமுகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 3 பேர் பலி, 7 பேர் காயம்

சோமாலிய துறைமுகத்தில் பயங்கரவாதிகள் கார் மூலம் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மொகடிஷூ: சோமாலிய துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர கார் குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூ. இங்குள்ள துறைமுகத்தில் இன்று பயங்கரவாதிகள் கார் மூலம் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். துறைமுகத்தில் உள்ள வரி வசூல் மையத்தை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Somalia conflict: Huge blast rocks Mogadishu port area

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏழு பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற போது, துறைமுகத்தினுள் ஏராளமானவர்கள் இருந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சோமாலிய இஸ்லாமிய அமைப்பான அல்-சபாப் அடிக்கடி தலைநகர் மொகடிஷூவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இதுவும் அந்த அமைப்பின் வேலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

English summary
A huge explosion has killed at least three people near the port of the Somali capital, Mogadishu, police say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X