சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க கப்பலால் பரபரப்பு
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவால் கட்டப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகே அமெரிக்க போர் க் கப்பல் ஒன்று பயணித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சீனாவின் தென் சீனக் கடல் பகுதிக்கு உரிமை கோரலுக்கு அமெரிக்க தரப்பிலிருந்து சவால் விடும் வகையில் நடந்த முதல் சம்பவம் இதுவாகும்
பெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஊடகங்கள், தென் சீனக் கடலின் ஸ்பார்லி தீவுகளில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் என்ற பாறைப் பகுதிக்கு 12 கடல் மைல்தொலைவுக்கு அப்பால் அமெரிக்க போர்க் கப்பல் பயணித்ததாக தெரிவித்துள்ளன.
கடல் பாறைகள் மற்றும் தீவுகள் உள்பட ஒட்டுமொத்த தென் சீனக்கடல் பகுதிக்கும் சீனா உரிமை கோரியுள்ள சூழலில், இவற்றுக்கு வேறு சில நாடுகளும் உரிமை கோருகின்றன.
உலகின் எந்த சர்வதேச கடல் பகுதியில் தனது நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தென் சீனக் கடல் பகுதியை ராணுவ மயமாக்கி வருவதாக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியினால் உலகளாவிய ரீதியில் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற கவலைகள் உண்டாகியுள்ளன.
பிற செய்திகள் :
பீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து!
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?
பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்