தென் கொரிய அதிபர் பதவி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்
தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெவை பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தென் கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெவை பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய நெருங்கிய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், பார்க் குன் ஹெ சட்டத்தை மீறியுள்ளார் என்று இந்த அரசியல் சாசன நீதிமன்றம் கூறியுள்ளது.
தென் கொரிய அதிபர் மீதான ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: 29 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல்
தென் கொரிய அதிபர் அலுவலகம் வயாகரா மாத்திரைகளை வாங்கிய விசித்திரம்
நான்காவது வாரமாக தொடரும் தென் கொரிய அதிபருக்கு எதிரான போராட்டம்
காணொளி : தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்
தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்பட்ட சோய் சூன்-சில்லுக்கு பார்க் குன் ஹெ ஆதரவு அளித்திருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் சாசன நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி விசாரிக்கப்படுவதற்கான விதிவிலக்கு உரிமையை இழக்கும் பார்க் குன் ஹெ, குற்றவியல் விசாரணை நடைமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தென் கொரிய அதிபர் பார்க் ஊழலில் ஈடுபடவில்லை - வழக்கறிஞர்
நான்காவது வாரமாக சோலில் அதிபருக்கு எதிராக போராட்டம்
கோபம் தணியாத தென் கொரிய மக்கள்; அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம்
இதனால், இன்னும் 60 நாட்களுக்குள் தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தென் கொரியாவின் முதலாவது பெண் அதிபராக புகழ்பெற்ற பார்க் குன் ஹெ, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது தலைவராகவும் மாறியுள்ளார்.
தென் கொரியா: அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு
தென் கொரிய அதிபர் மீதான முறைகேடு குற்றச்சாட்டில் சாம்சங் நிறுவன வாரிசு கைதாகிறாரா?
தென் கொரிய அதிபருக்கு தொடரும் நெருக்கடி: தோழியின் மகள் கைது
இவரை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நாட்டை பிளவுப்படுத்தியுள்ளதாக சோலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.
மேலதிக தகவல்களுக்கு:
தென் கொரிய அதிபர் பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் சோலில் போராட்டம்
தென் கொரிய அதிபருக்கு எதிராக புதிய போராட்டம், பலத்த பாதுகாப்பில் சோல்
தென் கொரியாவில் அதிபரின் நெருங்கிய தோழி செல்வாக்கு செலுத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது
தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன்
வழக்கை சந்திக்க நாடு திரும்பிய தென் கொரிய அதிபரின் தோழி