For Daily Alerts
Just In
தலைகுப்புற கவிழ்ந்த ஸ்பெயின் கல்லூரிப் பேருந்து- 14 மாணவர்கள் பலி
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, காரின் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 14 மாணவர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்பெயின் நாட்டில் ஒரு விழாவில் பங்கேற்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தரகோனா என்ற இடத்தில் உள்ள வளைவில் பேருந்து வந்தபோது முன்னே சென்ற காரில் மோதி, சாலை தடுப்பை தாண்டி கவிழுந்து விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில் 14 மாணவர்கள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக வந்த மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Comments
English summary
At least 14 people have been killed after a bus carrying foreign students crashed on a Spanish motorway between the cities of Barcelona and Valencia.
Story first published: Monday, March 21, 2016, 10:09 [IST]