பாத்ரூமில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி: துபாயில் கடைசி நிமிடங்கள்
பாத்ரூமில் மயங்கிய நிலையில் ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
துபாய்: துபாயில் உள்ள விடுதி அறையில் பாத்ரூம் உள்ளே பாத் டப்பில் ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் கிடந்ததாகவும் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
துபாயில் நடிகர் மோஹித் மோர்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள போனி கபூர், ஸ்ரீதேவி மற்றும் இளைய மகள் குஷி ஆகியோர் கடந்த வாரமே சென்றிருந்தார்கள்.
திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் மட்டும் மும்பை திரும்பினார். இந்நிலையில் திடீரென போனி கபூர் துபாய் சென்று ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அவர்கள் துபாயில் உள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் தங்கிருந்தார்கள். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனி கபூருடன் ஸ்ரீதேவி 15 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார்.
பின்னர் இரவு விருந்துக்கு செல்லவிருந்த ஸ்ரீதேவி, பாத்ரூம் சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியில் வராததால் போனி கபூர் கதவை தட்டியுள்ளார். எந்தவித பதிலும் இல்லை.
இதனால் உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது பாத்டப்பில் ஸ்ரீதேவி மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.