உயிர் வாழ ஆசையா.. அப்ப பூமியை காலி பண்ணிட்டு வேற கிரகத்துக்கு ஓடிருங்க.. எச்சரிக்கும் ஹாக்கிங்
பருவ நிலை மாற்றத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டுமானால் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்தார்.
லண்டன்: பருவ நிலை மாற்றத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்க வேண்டுமானால் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வேற்று கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்று இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்தார்.
வளி மண்டலத்தில் மாசு ஏற்பட்டு வருவதாலும், பருவ நிலை மாற்றத்தினாலும் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பருவ நிலை மாற்றத்தை தடுக்க வழிமுறைகள் குறித்தும் உலக அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலகில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஆவணப்படம் ஒன்றின் மூலம் ஹாக்கிங் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அதாவது அதிகரித்து வரும் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை, தொற்றுநோய்கள் உள்ளிட்டவைகளில் இருந்து நாம் தப்பி உயிர் வாழ வேண்டும் என்றால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் காலி செய்ய வேண்டும்.
மேலும் மனிதன் வாழ தகுதியான வேற்று கிரகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் அங்கு குடியேற மனிதர்கள் முற்பட வேண்டும் என்று அவர் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேற்று கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஹாக்கிங்கும், அவரது முன்னாள் மாணவர் கிரிஸ்டோஃபே கல்ஃபர்ட் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.