நியூசிலாந்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்கே லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக பதிவானது.
நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் புதன்கிழமை மாலையில் லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் நிலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுத்தியதாக தகவல் ஏதும் இல்லை. ஆனாலும் நியூசிலாந்தின் பிஜி, வனடு மற்றும் பிற பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் கடலோர பகுதிகளில் அலைகள் ஆபத்தாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. லாயல்டி தீவு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.