For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By Siva
Google Oneindia Tamil News

பன்டா அசே: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்

அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் அசே மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து

வெளியேறினர். நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.

கடந்த 2004ம் ஆண்டு அசே கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதையடுத்து சுனாமி ஏற்பட்டதால் பல்வேறு நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர்

பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong quake measuring 6.2 in the Richter scale struck Indonesia's Sumatra island on sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X