துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்
துபாய்: துபாயில் சூப்பர் ஸ்டார்ஸ் டி20 இரண்டாவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை(18ம் தேதி) முதல் மே மாதம் 17ம் தேதி வரை துபாய் ஆண்கள் கல்லூரியில் அமைந்துள்ள ஃபேர்கிரவுண்ட் ஓவல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹமும் ஒரு காரும் பரிசாக அளிக்கப்படும். போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
துபாய் கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் முஹம்மது ரேதா அப்பாஸ், செயலாளர் அமீன் ஃபாரூக், பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு தூதர் ஜாவேத் மாலிக், இலங்கை கன்சல் ஜெனரல் அப்துல் ரஹீம், இந்திய கன்சல் - கல்வி கஜாரி பிஸ்வாஸ், இந்திய வர்த்தகப் பிரமுகர் பரத்பாய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அணி விபரம், அணிக்கான சீருடை, கோப்பை உள்ளிட்டவை குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

அலுபான்ட் ஹைதராபாத் நவாப், புரூக்ஸ் கொலும்பு லயன்ஸ், டானுமே மும்பை வாரியர்ஸ், குளோப்லிங்க் வெஸ்ட்ஸ்டார் கொச்சி ஐலேண்டர்ஸ், இன்டர்ஃபேஸ் டெல்லி முகல்ஸ், மல்டிபிளக்ஸ் துபாய் ராயல்ஸ், செவன் சீஸ் ராஜஸ்தான் ராயல்ஸ், விங்ஸ் அகமதாபாத் ஆசஸ், யாஸ் ஸ்போர்ட் ராவல்பிண்டி ராயல்ஸ் உள்ளிட்ட 16 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
போட்டிகள் துபாய் கிரிக்கெட் கவுன்சில் ஆதரவுடன் வெப் சேனல், ஜூஹி யாஸ்மின் கான் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications