கரை ஒதுங்கிய பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?: மழுப்பும் ஆஸ்திரேலியா
சிட்னி: மாயமான மலேசிய விமானத்தினுடைய பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் கரை ஒதுங்கிய 2 பாகங்களை ஆஸ்திரேலியாவில் வைத்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2014ம் ஆண்டு 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிபுணர்கள் அந்த பாகங்களை ஆய்வு செய்து முடித்துள்ளனர். இதையடுத்து அந்த பாகங்கள் இந்த வாரம் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
மேலும் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கிடைத்த 2 பாகங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து விமானத்தை ஆஸ்திரேலியா தலைமையில் தேடும் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
தென்னாப்பிரிக்காவில் கிடைத்த 2 பாகங்களை ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பாகங்கள் மாயமான விமானத்தினுடையதா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.