சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல்
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், சிரியாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது அமெரிக்கா திடீரென ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரியா தலைமைக்கு எதிராக ஏதாவது நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
அவரது இந்த சமிக்ஞை, அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சிரியாவில் 'விஷவாயுத் தாக்குதல்'- யார் காரணம்