நேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்!
சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் துருக்கி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Recommended Video
டமாஸ்கஸ்: சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் துருக்கி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் தற்போது தீவிரமாக போர் நடந்து வருகிறது. ஆனால் இந்த போர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போர் கிடையாது. இது துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு இடையிலான போர் ஆகும்.
சிரியாவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க ராணுவமும், குர்து படைகளும் சேர்ந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடி வந்தது.
சளைக்காமல் திரும்பத் திரும்ப வரும் மோடி.. அலுக்காமல் கோ பேக் சொல்லும் தமிழகம்.. ஏன்?
என்ன போர்
அமெரிக்க படைகள் வெளியேறியதால் குர்து படைகள் தனித்து விடப்பட்டது. குர்து படைகளை பல வருடங்களாக எப்போது காலி செய்யலாம் என்று துருக்கி திட்டமிட்டு வந்தது. அதற்கு அல்வா போல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் டிரம்ப். இதை தற்போது துருக்கி பயன்படுத்த தொடங்கி உள்ளது.
என்ன மோசம்
இதனால் தற்போது துருக்கி சிரியாவில் உள்ள குர்து படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ஐஎஸ் அமைப்பிற்கும் ஒரு வகையில் சாதகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லை
ஆனால் இது தொடர்பாக அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தது. அமெரிக்கா தனது படையை வாபஸ் வாங்கியதுதான் இந்த சண்டைக்கு காரணம். ஆனாலும் சண்டையை உருவாக்கிவிட்டு, அமெரிக்கா அமைதி காத்து வந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.
சிரியா நிலை
சிரியாவில் துருக்கி படை தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா உடனடியாக தலையிடும் என்று டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் 1 லட்சம் மக்கள் இரண்டு நாளில் இடம்பெயர்ந்தும் கூட அமெரிக்கா எதுவும் பேசாமல் இருந்தது. இதனால் சிரியாவில் உள்ள குர்து படைகள் மொத்தமாக அழிய போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள்.
குர்து நிலை
ஆனால் தற்போது புதிய திருப்பமாக குர்து படைகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் துருக்கி மீது மோசமான நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேட்டோ படை
இது தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளது. நேட்டோ படைகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதையும் செய்ய தயார். துருக்கி உடனடியாக சிரியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா இதன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.