For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 40 ராணுவ வீரர்கள் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் இன்று ராணுவ வீரர்கள் வந்த வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். வத்ராக் பகுதியில் இருந்து காபூல் நோக்கி வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Taliban attack on Afghanistan police cadets

இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை செய்தித் தொடர்பாளர் சேதிக் சித்திக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நேபாள பாதுகாவலர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Taliban bombers have attacked an Afghan police convoy outside the capital Kabul, killing at least 40 people and wounding 50 others, officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X