For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் உடல்சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் காபூல் அருகே உள்ள கார்டஸ் பகுதியில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் பயிற்சிபெற்று வருகின்றனர்.

Taliban suicide bombers and gunmen attacked in Afghanistan kills 32

இங்கு காவல்துறையினர் குடியிருப்பும் உள்ளது. இந்நிலையில் இங்கு வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தீவிரவாதி பயிற்சி மையத்தில் நுழைந்து காரை வெடிக்க செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்கொலைப் படைத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனோர் பெண்கள், மாணவர்கள் மற்றும் போலீசார் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபன் தீவிரவாதிகள் இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

English summary
Taliban suicide bombers and gunmen have stormed a police training center in the eastern Afghan city of Gardez, killing at least 32 people, Another 200 were injured in the assault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X