4 மாதங்களாக வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. கும்பலுக்கு போலீஸ் வலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமியை 4 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு கொத் மோஹிப் டால் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.
அவரை ஒரு கும்பல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடத்தி ஒரு இடத்தில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. சிறுமிக்கு வாய் பேச முடியாததால் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த கும்பல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
என்ன கொடூரம்.. பல ஆண்டுகளாக இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தையை கொலை செய்த தாய், மகள்கள்
இந்த சம்பவத்தில் சிறுமியின் உறவினர்களே ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.