இந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம்
இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
பாரிஸ்: இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை, மக்கள் சர்ச்சுகளுக்கு செல்வார்கள் என்பதால் இந்த தாக்குதல் இன்று காலை நடந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற பகுதியில் உள்ள மூன்று முக்கிய சர்ச்சுகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெரிய இஸ்லாமிய நாடான இதில் இந்த பகுதியில்தான் அதிக சர்ச்சுகள் உள்ளது.
உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வந்த தீவிரவாதிகள், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மூன்று சர்ச்சுக்குள்ளும் இந்த வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி ஆகியுள்ளார். தாக்குதலால் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீவிரவாத தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற சர்ச்சுகளில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.