For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் சூதாட்ட அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள உணவு விடுதி ஒன்றின் சூதாட்ட அரங்கில் நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் திடீரென நுழைந்தனர். சுதாரிப்பதற்குள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் 54 பேர் படுகாயடைந்துள்ளனர் என்றும், அவர்களில் சிலர் மோசமான நிலைமையில் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

English summary
Terrorist attack in Philipines hotel and resot killed 34 peple. The ISIS IS terrorists have been responsible for this brutal attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X