For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய சதி... கண்டுபிடித்து தடுத்த போலீஸ்.. 2 பேர் கைது!

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலம் ஆகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலம் ஆகி இருக்கிறது. இந்த சதி திட்டத்தை தீட்டிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பிரிட்டனில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் என்று கூறப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Terrorists planned to assassinate Britain PM

சக்காரியா ரகுமான், முகமது ஆகியுப் இம்ரான் என்ற அந்த இரண்டு நபர்களும் லண்டனை சேர்ந்தவர்கள். இவர்களிடம் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளது.

அதன்படி அவர்கள் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரிட்டனில் இருக்கும் 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றம் வழியாக பிரதமர் வரும் போது அவர் வாகனத்தில் குண்டு வீச திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்து இருக்கின்றனர்.

தற்போது போலீசார் அந்த திட்டத்தை முறியடித்து இருக்கின்றனர். மேலும் அவர்களை தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

English summary
Terrorists planned to assassinate Britain Prime Minister Theresa May. Two terrorist were arrested in the case from London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X