குகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
Recommended Video
பாங்காக்: செய்தியாளர்கள் சந்திப்பில் தாய்லாந்து சிறுவர்கள் அளித்த பதில்கள் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைகுள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.
இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டனர்
இந்த நிலையில் இந்த பேட்டியில் எல்லா சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டார்கள். மிகவும் தவறான முடிவை தாங்கள் எடுத்துவிட்டோம். எங்களுக்கு அங்கே இவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று தெரியாது. எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அங்கு செல்வது குறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள செல்கிறோம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள், என்றனர்.
முதலில் வெளியேறுவது
யார் முதலில் வெளியேறுவது குறித்த கேள்விக்கு, யார் முதலில் வெளியேறுவது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. அந்த விஷயத்தில் எங்களுக்குள் போட்டியே இல்லை. இதை நாங்கள் மீட்பு பணியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தோம். அவர்கள்தான் யார் வெளியேற வேண்டும் என்று கூறினார்கள் என்றனர்.
மீண்டும் குகைக்கு
மீண்டும் குகைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு , சிலர் கண்டிப்பாக செல்ல ஆசை இருக்கிறது. ஆனால் இந்த முறை நல்ல பாதுகாக்கப்புடன் செல்ல வேண்டும். சிலர் எங்களுக்கு இனி அந்த குகையே வேண்டாம். இப்போதும் கூட அந்த பயம் எங்களுக்கு ;போகவில்லை என்று பேட்டியளித்துள்ளனர்.
என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
எதிர்காலத்தில் என்ன ஆகவேண்டும் ஆகவேண்டும் வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பாலான சிறுவர்கள், கால்பந்து வீரர்கள் ஆக வேண்டும் என்ற . ஒரே ஒரு சிறுவன் மட்டும் தாய்லாந்து கடற்படை வீரன் ஆகவேண்டும் என்றான். அவர்கள்தான் இந்த மீட்பு பணியை முன்னின்று நடத்தியது. இந்த பதிலுக்கு எல்லோரு கரகோஷம் எழுப்பினார்கள்.
என்ன நடந்து இருக்கும்
முக்கியமாக இவர்கள் அளித்த பேட்டியில், உங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் குகையை உடைக்க திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். எங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால், நாங்கள் குகை உடைத்துக் கொண்டு வெளியே சென்று இருப்போம் என்றனர். இந்த பதிலுக்கு பெரிய அளவில் கரகோஷம் கிடைத்தது.