இன்றைய முக்கிய செய்திகள் இவைதான்!
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை ஹைகோர்ட்டும் உறுதி செய்துள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கொடூரன் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிப்ரவரி 19ல் தூக்கு தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தஷ்வந்த செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் கொடூரமானது
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தூக்கு தண்டனையே சரியானது
தஷ்வந்த் தூக்குக் கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்துக்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும்
தஷ்வந்த் செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனையை தவிர வேறு தண்டனை ஈடாகாது
கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் விவரிக்க முடியாது
தஷ்வந்தின் தூக்கு தண்டனையை உறுதி செய்த விவகாரத்தில் நீதிபதிகள் விமலா, ராமதிலகம் கருத்து
குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்பு
மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது
கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது
கடந்த 17 நாட்களுக்கு முன்பு 13 பேரும் தாய்லாந்து குகைக்குள் சிக்கினார்கள்
செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீடு
தாய் சரளா, சிறுமி ஹாசினையை கொன்ற குற்றத்திற்காக தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது
மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது