தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவால் மரணம்
பாங்காக்: உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
கடந்த 1946ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அவருக்குப் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறுநீரகங்கள், இதயம் போன்ற உறுப்புக்கள் மிகவும் பலவீனமாக இருந்து வந்தன.
நேற்று முதல் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அரண்மனையிலிருந்து வெளியான தகவல்கள் உறுதிப்படுத்தின.
இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார் என தாய்லாந்து அரண்மனை அறிவித்துள்ளது. முன்னதாக மன்னர் உடல்நலம் பெற வேண்டி நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.