தீவிரவாதிகளின் ஆளில்லா விமானங்களைத் தகர்க்க கழுகுகளை பயன்படுத்தும் பிரான்ஸ்
தீவிரவாதிகள் தயாரிக்கும் ஆளில்லா விமானங்களை தகர்த்தெறியும் பணியில் பிரான்ஸ் நாட்டு விமானப் படை கழுகுகளை ஈடுபடுத்துகிறது.
பிரான்ஸ்: ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாத செயல்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாதிகளால் தயாரிக்கப்படும் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிக்க பிரான்ஸ் நாட்டு விமானப் படை கழுகுகளை ஈடுபடுத்தி வருகிறது.
பயங்கரவாதம் என்பது தற்போது உலகளாவிய பிரச்னையாகவும், திறமையுடன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. இதில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற பயங்கரவாதிகள் கையாளும் முறைகளோ மிகவும் வினோதமாகவே உள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் நோக்கில் அவர்களால் உருவாக்கப்படும் ஆளில்லா விமானங்கள், பிரான்ஸ் அதிபர் மாளிகை உள்பட முக்கிய இடங்களில் பறக்கும் போது அவற்றை சுடுவதால் பேராபத்து நிகழும்.
இதைத் தவிர்க்க பிரான்ஸ் நாட்டு விமானப் படையினர் நூதன வழியை கையாள்கின்றனர். அதற்காக 4 கழுகுகளுக்கு அவை குஞ்சு பொரித்த முதல் விமானப் படையினர் பயிற்சி அளித்துள்ளனர். பயங்கரவாதிகளின் ஆளில்லா விமானங்கள் வரும்போது அதன் மீது தாக்குதல் நடத்தி அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் கழுகுகளின் கால்களில் கட்டப்படுகின்றன.
20 நொடிகளில் 200 மீட்டர் தூரம் பறக்கும் வல்லமை படைத்த கழுகுகள் அந்த விமானங்கள் மீது வேகமாக மோதி அதை புற்தரையில் விழ வைக்கின்றன. இதனால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் ஆளில்லா விமானங்கள் அழிக்கப்படுவதாக பிரான்ஸ் பெருமிதம் கொள்கிறது.