வாஜ்பாய் மறைவு: அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல்
மறைந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
Recommended Video
நியூயார்க்: மறைந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று டெல்லியில் காலமானார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, அமெரிக்கா சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,
.@SecPompeo: On behalf of the American people, I extend my heartfelt condolences to the people of #India on the passing of Former Prime Minister Atal Bihari Vajpayee. Today, our two countries & our bilateral relationship continue to benefit from Prime Minister Vajpayee’s vision. pic.twitter.com/2mtaOQhYmg
— Heather Nauert (@statedeptspox) August 16, 2018
நானும், அமெரிக்க மக்களும். வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, ஆதரவாக இருப்போம், வாஜ்பாயின் மறைவு எங்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவில் தவிக்கும் இந்தியாவுக்காக நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் . அவரது ஆட்சிகாலம் முதல் இப்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அவரது எண்ணமே , இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது., அவரது மறைவிற்கு இரங்கல்கள், என்றுள்ளார்.